×

மாநிலம் முழுவதும் பாதுகாப்பான குடிநீரை சீரான முறையில் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பிலும் மற்றும் பிற மாவட்டங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர் கே.என்.நேரு நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான குடிநீரினை சீரான முறையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும். மேலும், இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும். முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய குடிநீர் திட்டப் பணிகளின் மூலம் வழங்கப்பட வேண்டிய வீட்டு இணைப்புகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மாநிலம் முழுவதும் பாதுகாப்பான குடிநீரை சீரான முறையில் வழங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister KN Nehru ,Chennai ,Chennai Drinking Water Board ,Chennai Municipal Corporation ,Tamil Nadu Drinking Water and Drainage Board ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...